சென்னையின் ஒரு சில பகுதிகளிலும் காகங்கள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாட்டில் யாருக்கும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை என்றும், பொது சுகாதாரத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டது. மனிதர்களுக்குப் பரவாமல் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

0 கருத்துகள்